நாளை இசை வெளியீடு, இன்று 'வாத்தி ரெய்டு': விஜய் ரசிகர்கள் உற்சாகம்

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சற்று முன்னர் இந்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ‘குட்டி கதை’ மற்றும் ’வாத்தி இஸ் கம்மிங்’ ஆகிய இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு ’வாத்தி ரெய்டு’ என்ற பாடல் வெளியாக உள்ளது

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதை அடுத்து அந்தப் பெயரிலேயே ஒரு பாடல் வெளியாக உள்ளதால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர் அனிருத் இசையமைப்பில் உருவாகி இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்கள் இந்த பாடலை இப்போது வரவேற்க தயாராகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கொரோனாவிற்கு மருந்து??? மாட்டுக் கோமியம் அருந்திய இந்து மகா சபையினர்!!! வைரலாகும் வீடியோ

கொரோனா நோய் தொற்றுக்கு இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளும் தடுப்பு வழிமுறைகளும் தொடர்ந்து

போலி Hand Sanitizer பறிமுதல்!!! ஹரியாணா மாநில அதிகாரிகள் நடவடிக்கை!!!

இந்தியாவில் கொரோனாவில் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும், 2 உயிரிழப்பு ஏ

கொரோனா வைரஸால் தாமதமாகும் கார்த்தியின் அடுத்தப் படம்: பரபரப்பு தகவல்

கார்த்தி நடித்த 'கைதி' மற்றும் 'தம்பி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'சுல்தான்'.

மூன்று வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கும் லட்சுமிமேனன்: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார் 

பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' என்ற படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமிமேனன் அதன்பின்னர் சசிகுமாரின் சுந்தரபாண்டியன், விஜய்சேதுபதியின் 'றெக்க' என்ற உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்

திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிரகாஷ் கோவலமுடி என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளீயாகி