தளபதியின் 'மாஸ்டர்' ரிலீஸ்: திரையரங்கு உரிமையாளர்களின் பார்வை!

  • IndiaGlitz, [Sunday,January 03 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் 7 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்ததும், திரையரங்குகள் பிறந்த பின்னரும் ஆடியன்ஸ் வருகையின்மையால் அவதிப்பட்டு இருந்ததும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு சிக்கலான ஒன்றாக இருந்த நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவது மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தங்கள் மகிழ்ச்சியை திரையரங்க உரிமையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். நெல்லை ராம் முத்துராம் திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலை இருமுறை திரையிட முடிவு செய்திருக்கிறோம் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதேபோல் கோயம்பேடு ரோகிணி தியேட்டரின் டுவிட்டர் பக்கத்தில் ’மாஸ்டர்’ திருவிழாவை இப்போது ஆரம்பித்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் குரோம்பேட்டை உள்ள வெற்றி திரையரங்கு உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி 13-ஆம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படத்தையும் ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு ஒரு சில விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

’மாஸ்டர்’ படத்தை திரையிடும் போது உங்களுக்கு ஈஸ்வரன் திரைப்படத்தை திரையிட அனுமதி கொடுத்தது யார்? என்றும் ’மாஸ்டர்’ திரைப்படத்தை மட்டுமே இரு திரையரங்குகளில் திரையிட விட்டால் ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி தியேட்டருக்கு கிடையாது என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவு செய்துள்ளனர். இதற்கு நடுநிலையான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி இரண்டுமே வெற்றி பெற்றது போல், திரையரங்குகள் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படங்களுக்கும் வாய்ப்பு அளித்து இரண்டையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.


 

More News

மீண்டும் ஒருமுறை மன்னிப்பு: 'உண்மையா இது' என நெட்டிசன்கள் கேள்வி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, முதல் நாள் முதல் சக போட்டியாளர்களிடம் ஆவேசமாக பேசுவது, அதன்பின் கமல்ஹாசன் எபிசோடின்போது மன்னிப்பு கேட்பது என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

24 கேரட்டில் பர்கரா? கிறங்க வைக்கும் அதன் விலை!!!

வித்தியாசமான முயற்சியில்தான் இந்த உலகமே வளர்ச்சி பெறுகிறது. அப்படி ஒரு புதிய முயற்சியை பர்கரில் காட்டினால் எப்படி இருக்கும்

இந்தியாவில் பரவும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பா??

கொரோனா பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தட்டி கேட்க போகிறாராம் கமல்: பொறுத்திருந்து பார்ப்போம்!

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஆரி  மற்றும் பாலாஜி இடையே தொடர்ச்சியாக மோதல் வந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக

வீடியோ: மக்களின் ஆதரவு ஆரிக்கு என்பதை வெளிப்படையாக பேசிய ஹவுஸ்மேட்ஸ்!

நடைபெற்று முடிந்த லக்சரி டாஸ்க்கான ப்ரீஸ் டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர் என்பதும், அப்போது உறவினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரே நபர் ஆரி தான்