உலக மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் பெற்று மேரிகோம் சாதனை

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

கடந்த சில நாட்களாக டெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம் நேற்று முன் தினம் நடந்த அரையிறுதி போட்டியில் வட கொரிய வீராங்கனை கீம் மியை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதனையடுத்து அவர் இன்று நடைபெற்ற சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் உக்ரைன் நாட்டின் வீராங்கனை ஹன்னா ஒகோடாவுடன் மோதினார். மிகவும் ஆக்ரோஷமாக நடந்த இந்த போட்டியில் ஹன்னா ஒகோடாவை வீழ்த்தி மேரிகோம் சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஏற்கனவே உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 5 முறை தங்கம் வென்றுள்ள மேரிகோம் தற்போது 6வது முறையாக தங்கம் வென்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது இந்த வெற்றியின் மூலம் மேரிகோம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆறு தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றூள்ளார்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேரிகோம் அவர்களுக்கு நாடெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

'திமிரு பிடிச்சவன்' பாணியில் திருவண்ணாமலையில் செயல்பட்ட போலீசார்

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

'ஆயிரத்துள் ஒருவன் 2' எப்போது? செல்வராகவனின் பதில்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'

ரஜினியின் '2.0' படம் குறித்து சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0; திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடந்து வருகிறது

ரஜினி, விஜய் நிவாரண உதவி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கமல் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தையாகவே இருக்கின்றார்: அமைச்சர் ஜெயகுமார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசனுக்கும் ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே