கமல் இல்லாத மருதநாயகமா? ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

உலகநாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்று ‘மருதநாயகம்’. இந்த படம் இரண்டாம் எலிசபெத் ராணி மற்றும் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர்களால் கடந்த 1999ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட ஒருசில காரணங்களால் இந்த படம் தள்ளிபோனது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இந்த படம் அடுத்தகட்டத்திற்கு நகரவில்லை

இந்த நிலையில் ‘பாகுபலி’ சைரா நரசிம்மரெட்டி’ போன்ற சரித்திரப்படங்கள் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் ‘மருதநாயகம்’ படம் மீண்டும் உயிர்ப்பெறுமா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் கூறியபதில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

‘மருதநாயகம் படத்தை நிச்சயம் திரையில் பார்ப்பீர்கள். ஆனால் அந்த படத்தை என்னோடு நீங்கள் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே. ஏனெனில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகள் இருப்பதால் அந்த படத்திற்கு என்னால் அதிக நேரம் ஒதுக்க முடியாத சூழலில் உள்ளேன். மக்கள் பணியை பாதிக்காத வகையில் உள்ள படங்களை மட்டுமே நான் தற்போது ஒப்புக்கொண்டு வருகிறேன். ஏனெனில் எனது மீதி இருக்கும் காலம் இனி மக்களுக்கானது’ என்று கூறினார்

இந்த நிலையில் கமல் இல்லாத மருதநாயகமா? என அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More News

காமன்மேனாக இருந்தா பத்தாது, ஹீரோ வேணும்: ஹீரோ டீசர்

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று

700 வருடங்களுக்கு முந்தைய கல்லால் செய்யப்பட்ட வாள் கண்டுபிடிப்பு

தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போஸ்னியா என்ற நாட்டில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லால் செய்யப்பட்ட வாள் ஒன்றை நதிக்கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது 

மார்பகத்தில் ரகசிய கேமிரா வைத்து இளம்பெண் கண்டுபிடித்த விஷயம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை பார்ப்பவரகள் அந்த பெண்ணின் எந்த உறுப்பை முதலில் பார்க்கின்றனர் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது

குடும்பமே மரணம் அடைய காரணமான டிரைவரை மன்னித்த கருணையுள்ள பெண்!

தென்மேற்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்த 43 வயது பெண் ஒருவரின் கணவர், மகள் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஆகிய மூன்று உயிர்கள் மரணம் அடைய காரணமாக இருந்த டிரைவர்

உலகின் 50 செக்ஸி நகரங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம்!

தனியார் நிறுவனம் ஒன்று உலகில் உள்ள 50 செக்ஸியான நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர்