close
Choose your channels

மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலை !

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை பதக்கம் வென்ற வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு பணிநியமன ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி மற்ற வீரர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருந்தார். அப்போதே இவருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு சார்பில் பரிசுத்தொகை மட்டுமே வழங்கப்பட்டது.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 1.86 மீ உயரம் தாண்டி மாரியப்பன் தங்கவேல் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் அரசுபணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து மாரியப்பன் தங்கவேல் குரூப்-1 பிரிவில் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் துணை மேலாளராக பணியாற்றுவதற்கு பணி நியமன கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment