மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் முக்கிய அப்டேட்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன் என்ற படத்தை இயக்கிய அவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்கியுள்ள மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதுவரை மூன்று படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் நான்காவது படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாழை இலை போன்ற ஒரு அமைப்பில் உள்ள சாலையில் 4 சிறுவர்கள் ஓடும் போஸ்டரை மாரி செல்வராஜ் பதிவு செய்து ‘நாளை முதல் ஒரு புதிய பயணம்’ என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாரி செல்வராஜ் நாளை இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

நாளை இந்த படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும் இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் இந்த தகவல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழ்நாடு பசங்க மாதிரி அப்பாவி பசங்க எங்கேயும் கிடைக்க மாட்டாங்க.. 'கட்டா குஸ்தி' டிரைலர்

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் ராணா நடித்த 'கட்டா குஸ்தி'  திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக

என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க.. அசீமை நேரடியாக எச்சரிக்கும் கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று 42வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் நடந்த ராஜா ராணி டாஸ்க்கில் அசீம் அத்துமீறி நடந்து

இனி ஒவ்வொரு மாதமும் நடக்கும்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு

தளபதி விஜய் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து வருவார் என்பதும் விஜய் மக்கள் இயக்கம் குறித்த விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்வார் என்பதும் தெரிந்ததே. 

திடீரென நடுரோட்டில் நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை: அதிர்ச்சி தகவல்

தெலுங்கு நடிகை ஒருவர் திடீரென நடுரோட்டில் நிர்வாண போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் மாதிரி ஒரு நல்ல பிள்ளையை உலகத்திலேயே பார்க்க முடியாது: கோபமாக பதிலளித்த எஸ்.ஏ.சி

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் விஜய் பேசுவதில்லை என்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன