தாத்தா கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா? மனோஜ் பாரதிராஜாவின் 'மார்கழி திங்கள்' டீசர்..

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் ’மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.

பாரதிராஜா முக்கிய வேடத்தில் கிடைக்கும் இந்த படத்தில் ஷியாம் மற்றும் ரக்ஷனா நாயகன் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் சுசீந்திரனின் பல படங்களில் நடித்த அப்புகுட்டி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் சுசீந்திரனும் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தின் டீசர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. ஷ்யாம் செல்வம் மற்றும் ரக்ஷனா ஆகிய இருவரும் கிராமத்து பள்ளியில் படிக்கும் போது காதலிக்கின்றனர். இந்த காதலை தனது தாத்தாவிடம் சொல்லப் போவதாக நாயகி கூற, தாத்தாவிடம் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா என்று ஷியாம் ஆத்திரத்தில் கூறும் காட்சியுடன் இந்த டீசர் முடிவடைகிறது

இந்த காதலால் ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகள் எப்படி தீர்ந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகம் ஆகும் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் திரையுலகில் களமிறங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்.. ஹீரோ, டைட்டில் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரையுலகில் களமிறங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.

நிஜ கொரில்லாவுடன் நடித்த அஞ்சலி.. வித்தியாசமான 50வது படம்..!

நடிகை அஞ்சலி நடிக்கும் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் 'ஈகை' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு

20 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனராகும் 'பாட்ஷா' பட நடிகர்.. மகன் தான் ஹீரோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி திரைப்படமான 'பாட்ஷா' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரைப்படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

திடீரென காவல்துறையில் புகார் அளித்த நடிகை நிரோஷா.. என்ன காரணம்?

நடிகை நிரோஷா திடீரென தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது வீட்டில் திருடு போய்விட்டதாக புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 நாடுகளில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. பக்கா பிளானுடன் களமிறங்கும் மகிழ் திருமேனி..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தின் அறிவிப்பை லைகா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்தி வராததால்