'தர்பார்' படத்தில் மரணமாஸ் பாடல்: எஸ்பிபி தகவல்

  • IndiaGlitz, [Monday,July 01 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அவருடைய மாஸ் ஓப்பனிங் பாடலை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடி வருவது தான் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தை வேண்டுமென்றே இயக்குனர் ரஞ்சித் மட்டும் தனது இரண்டு படங்களில் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் 'பேட்ட' படத்தில் இருந்து மீண்டும் மாஸ் ஓப்பனிங் பாடல் ரஜினிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தயாராகி வரும் 'தர்பார்' படத்திலும் ஒரு மரணமாஸ் ஓப்பனிங் பாடல் இருப்பதாகவும், அந்த பாடலை தானே பாடியிருப்பதாகவும் தகவல் தந்த எஸ்பிபி, அந்த பாடலுக்கான சூழலையும் விளக்கினார்.

அதாவது கடமையை சரியாக செய்த போலீஸ் கேரக்டர் ரஜினிக்கு ஒரு பாராட்டு விழா நடப்பதாகவும், கடமையை செய்த எனக்கு எதற்காக பாராட்டு விழா என்று கூறும் ரஜினி, 'சட்டையை போலீஸ் உடையை கழட்டிவிட்டால் நானும் உங்களில் ஒருவன் தான்' என்று கூறிவிட்டு ஒரு பாடலை பாடுவார் என்றும், அந்த பாடலைத்தான் நான் பாடினேன்' என்றும் எஸ்பிபி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

More News

தங்க மெடல்களை வென்று குவித்த பிரபல நடிகரின் மகன்!

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் என்பதும்

அடுத்த பிக்பாஸ் வீட்டின் தலைவர் மீராமிதுனா? வனிதாவுக்கு இருக்கு தரமான சம்பவம்!

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்த பதவி ஏதோ முதலமைச்சர் பதவி போல் வானாளவிய அதிகாரம் கொண்ட பதவி என நினைத்து கொண்டு வனிதா

நீச்சல் அறிவுரை டுவீட்டை திடீரென நீக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் சற்றுமுன் தனது மகனுக்கு நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு

பெற்றோர்களுக்கு செளந்தர்யா ரஜினி கூறும் முக்கிய அறிவுரை!

சமீபத்தில் திருமணமான இயக்குனரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த், கணவர் மற்றும் குழந்தை 'வேத்' ஆகியோர்களுடன் ஒரு புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்

பா.ரஞ்சித்தின் மல்டிஸ்டார் படத்தில் மூன்று பிரபல நடிகர்கள்!

கோலிவுட் திரையுலகில் 'செக்க சிவந்த வானம்' உள்பட ஏற்கனவே ஒருசில மல்டிஸ்டார் படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது பா.ரஞ்சித் ஒரு