த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தாத மன்சூர் அலிகான்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த நிலையில் அந்த அபராதத்தை அவர் செலுத்தாத நிலையில் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தவறு என்றும் இதற்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது என்று கூறிய நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்த நிலையில் தனக்கு நிதி நெருக்கடியாக இருப்பதால் ஒரு லட்ச ரூபாயை உடனே புரட்ட முடியவில்லை என்றும் எனவே 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் நீதிபதியிடம் சமீபத்தில் மன்சூர் அலிகான் கேட்டிருந்தார். அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் திடீர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ’அபராதம் கட்டுவதாக தனி நீதிபதியிடம் ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்று விட்டு, பின்னர் இங்கு வந்து தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறினார். வேண்டும் என்றால் தனி நீதிபதியிடம் சென்று உத்தரவை திரும்ப பெற கோரிக்கை விடலாம் என்றும் அல்லது பணம் கட்ட முடியுமா? முடியாதா? என்பதை அவரிடம் தெரிவிக்கலாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

More News

நான் பார்த்த விஜயகாந்தை கொண்டாடணும்னு இந்த படத்தை எடுத்தேன்: இயக்குனர் பச்சமுத்து..!

 கார்த்திக் சுப்புராஜ் எப்படி ஒரு ரஜினிகாந்தின் தீவிர ரசிகரோ, லோகேஷ் கனகராஜ் எப்படி ஒரு கமல்ஹாசனின் ரசிகரோ, அது போல் நான் விஜயகாந்தின் தீவிர ரசிகன், நான் பார்த்து கொண்டாடிய விஜயகாந்துக்கு

'ரோஜா' சீரியல் சிபு சூரியன் மகனா இவர்? வைரல் புகைப்படம்..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற சீரியலில் நாயகனாக நடித்த சிபு சூரியன் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா?

நீண்ட இடைவெளிக்கு பின் அடுத்த பட அப்டேட் கொடுத்த சமந்தா.. வைரல் புகைப்படம்..!

நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் தாக்கிய நிலையில் அவர் திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருப்பதாக அறிவித்திருந்தார். முற்றிலும் அவை சிகிச்சை எடுத்துக் கொண்டு உலகின்

சன்னி லியோன் தலையில் மாறி மாறி அடிக்கும் 5 பேர்.. என்ன விளையாட்டு இது!

நடிகை சன்னி லியோன் நாற்காலியில் ஹெல்மெட் அணிந்து உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரை பின்புறம் உள்ள ஐந்து நபர்கள் மாறி மாறி அவரது தலையில் அடிக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

கைவசம் 3 பாலிவுட் படங்கள்.. இந்தி திரையுலகில் பிசியாகும் ஜோதிகா..!

நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த நிலையில், அதன் பின்னர் '36 வயதிலேயே' என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். அ