நான் தான் த்ரிஷா மீது வழக்கு போட வேண்டும்: மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி..!

  • IndiaGlitz, [Tuesday,November 21 2023]

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகை த்ரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் அமைப்பு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும்.

பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை.

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது.

நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை, நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்' என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

More News

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கஜ் த்ரிபாதியின் 'கடக் சிங்' டிரைலர்.. ZEE5 வெளியிட்டது..!

இந்தியாவில் நடைபெறும் 54 வது சர்வதேச திரைப்பட பண்டிகையின் திறப்பு விழா நடைபெறும்  கோவாவில்  பங்கஜ் த்ரிபாதி நடிக்கும் 'கடக் சிங்' படத்தின் ட்ரெய்லரை  ZEE5 வெளியிடுகிறது

பிக்பாஸ் வீட்டில் முதல் பூகம்பம்...திணறும் போட்டியாளர்கள்..அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பூகம்பமாக மூன்று பெரிய டாஸ்க்குகள் வைக்கப்படும் என்றும் அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றால் மட்டுமே வெளியே இருந்து உள்ளே வரும் வைல்டு கார்டு போட்டியாளர்களை சமாளிக்க முடியும்

ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்..!

 பிரபல நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த 'காதல் தி கோர்' என்ற திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை இரண்டு நாடுகளில் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபலமா? செம்ம வெயிட்டான ரோல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் ஹிரானியின் மாயாஜாலம்.. டிசம்பரில் வெளியாகும் 'டங்கி'..!

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட  அவரது பெயர் மட்டுமே போதும்!!  மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை  தொடர்ந்து வழங்கியவர்,