த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மான நஷ்ட வழக்கு: ரூ.1 கோடி கேட்டு மன்சூர் அலிகான் மனு..!

  • IndiaGlitz, [Saturday,December 09 2023]

நடிகை த்ரிஷா உட்பட 3 பிரபலங்கள் மீது நடிகர் மன்சூர் அலிகான் ரூபாய் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் மன்சூர் அலிகான் பேசிய போது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு ஒன்றை செய்தார். இதற்கு ’இது மாதிரி மனிதர்கள் மனிதர் குலத்துக்கு அவமானம்’ என்று த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு, சிரஞ்சீவி உட்பட பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் படி மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் ’ என்று த்ரிஷா காவல்துறையினர்களிடம் கூறியிருந்த நிலையில் திடீரென த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

தனது முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால் மூன்று பேரும் தலா ஒரு கோடி ரூபாய் கணக்கு மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

'ஃபைட் கிளப்' படத்தின் 'யாரும் காணாத' மெலோடி பாடல்.. நெகிழ வைத்த கோவிந்த் வசந்தா..!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஃபைட் கிளப்' என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

கமல், ரஜினி கலந்து கொள்ள இருந்த 'கலைஞர் 100' விழா ஒத்திவைப்பா? புதிய அறிவிப்பு..!

டிசம்பர் 24 ஆம் தேதி திரையுலகினர் ஒன்று சேர்ந்து நடத்த திட்டமிடப்பட்டிருந்த 'கலைஞர் 100'  விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  

பதானை விட டபுள் மடங்கு கவர்ச்சியில் தீபிகா.. பட்டையை கிளப்பிய 'பைட்டர்' டீசர்..!

ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான 'பைட்டர்' படத்தின் டீசர் இன்று வெளியாகி இணையத்தில்

3 நாள் கழிச்சு வீட்டுக்கு போறேன்.. சென்னை வெள்ளம் குறித்து 'பாக்கியலட்சுமி' கோபி

சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூன்று நாட்களாக அக்கா வீட்டில் தங்கி விட்டு தற்போது தான் தனது வீட்டிற்கு செல்ல போவதாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகர் கோபி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில்

லேடி சூப்பர் ஸ்டாருன்னு சொல்லாதீங்க.. சொன்னாலே திட்றாங்க.. நயன்தாரா பேட்டி..!

திரையுலகமே நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வரும் நிலையில் 'தயவு செய்து அந்த பெயரை வைத்து சொல்லாதீர்கள், அந்த பெயரை சொன்னாலே என்னை திட்டுகிறார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில்