த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் கொடுத்த வாக்குமூலம் இதுதான்..!

  • IndiaGlitz, [Thursday,November 23 2023]

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தனக்கு குரல் பிரச்சனை உள்ளதால் நாளை ஆஜராவதாக மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று பதிவு செய்யப்பட்டதால் நீதிபதி அவரை கண்டித்தார். இதனை அடுத்து மனு சரி செய்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாளை இந்த மனு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையின் சம்மனை அடுத்து நேரில் ஆஜரான மன்சூர் அலிகான் கொடுத்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாக்குமூலத்தில் ’செய்தியாளர்களிடம் த்ரிஷா குறித்து பேசியது நான் தான், ஆனால் ஜாலியாக தான் நான் பேசினேன். த்ரிஷா அதை தவறாக புரிந்து கொண்டார். எந்த உள் அர்த்தத்துடன் நான் பேசவில்லை. நான் பேசியதற்கு த்ரிஷா மனவருத்தம் அடைந்திருந்தார் என்பதை அறிந்தேன். நானும் அதற்காக மனம் வருத்தம் அடைகிறேன்.

நான் குரல் பிரச்னைக்காக நாளை ஆஜராகலாம் என்று இருந்தேன். ஆனால் நான் தலைமறைவாகிவிட்டேன் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் இன்றே ஆஜராகி உள்ளேன். இந்த வழக்கு விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி நான் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More News

21 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த கமல்-ரஜினி.. வைரல் புகைப்படங்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர் என்பதும் அவ்வப்போது இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும்

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகிறதா? இல்லையா? குழப்பத்தில் ரசிகர்கள்..!

சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம்  நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

'ஏகே 63' படத்தை தயாரிக்க இருப்பது இந்த பிரபல நிறுவனமா? மாஸ் தகவல்..!

அஜித் நடித்து வரும் 63 வது படமான 'விடாமுயற்சி' படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தென்னிந்திய திரையுலகின் முன்னணி

'கங்குவா' படப்பிடிப்பில் விபத்து.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா.. அதிர்ச்சி தகவல்..

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது

அடுத்த வார எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர் இவரா?  பிக்பாஸ் வீட்டில் செம ட்விஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் அடுத்த வாரம் எவிக்சனுக்கு நேரடியாக நாமினேட் செய்யும் போட்டியாளர்கள் குறித்த காட்சிகள் உள்ளன.