பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அதிரடி கைது

  • IndiaGlitz, [Sunday,June 17 2018]

வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் மன்சூர் அலிகான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பசுமை வழிச்சாலை அமைப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழி சாலை அமைக்கப்படும் திட்டம் குறித்து சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. ஆனால் இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இந்த சாலை முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானது என்றும் இந்த சாலைக்காக பல கோடி மரங்கள் தேவையில்லாமல் வெட்டப்படுவதாகவும், மன்சூர் அலிகான் கூறியுளார்.

இந்த நிலையில் சென்னை சூளைமேட்டில் மன்சூர் அலிகானை சேலம் போலீசார் கைது செய்தனர். சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், மேலும் விசாரணைக்காக அவரை சேலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

65வது தென்னிந்திய பிலிம்பேர் விருது பெற்றவர்களின் விபரங்கள்

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர்கள் சங்கம்

நடிகைகள் நயன்தாரா, குஷ்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி கூறியுள்ளது.

அவரிடம் உள்ள ஒரே குறை இதுதான்: சந்தோஷ் நாராயணனின் காதல் மனைவி

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பொதுவாக வேலை செய்யும் இடத்தில் அமைதியாக இருப்பாராம். பாடல்கள் கம்போஸ் செய்யும்போதும் ரிகாடிங் செய்யும்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவராக இருப்பார்

ஆடம்பர காரில் சென்றவரை வெளுத்து வாங்கிய அனுஷ்கா ஷர்மா! ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் இத்தாலி நாட்டில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய 'கபாலி' வசனம்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று முன் தினம் தொடங்கியது