மன்சூர் அலிகானின் 3வது மனைவி கூறிய அதிர்ச்சி புகார்

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின்னர் வில்லன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். இவருடைய பெயர் அடிக்கடி ஊடகங்களில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது இவரது 3வது மனைவி இவர் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

மன்சூர் அலிகானின் 2வது மனைவி ஹமீதா என்பவர் தன்னை இரும்புக்கம்பியால் தாக்கியதாகவும், இந்த தாக்குதல் நடந்தபோது மன்சூர் அலிகான் அருகே இருந்தும் தடுக்கவில்லை என்றும் அவருடைய 3வது மனைவி வஹிதா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இரும்புக்கம்பியால் தாக்கப்பட்ட வஹிதா படுகாயம் அடைந்துள்ளதால் அவர் தற்போது சென்னை கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆளுனர் கொடுத்த அதிரடி புகார்: நக்கீரன் ஆசிரியர் திடீர் கைது!

ஆளுனர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

தமிழ் திரையுலகில் ஒரு நடிகை ஒருசில ஆண்டுகள் கதாநாயகியாக நடிப்பதே பெரிய விஷயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

சென்னை காவல்துறை ஆணையருடன் கருணாகரன் சந்திப்பு! புகார் அளித்தாரா?

சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசியிருப்பார். இந்த பேச்சு சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

பாலியல் புகாரில் வைரமுத்து: சின்மயி தந்த அதிர்ச்சி தகவல்

பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக தன்னுடைய இளவயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த கசப்பான அனுபவத்தையும், தனக்கு நெருக்கமான பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் அசம்பாவித சம்பவங்களையும்

ரகசிய திருமணமா? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

தமிழ் சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. விஜய்யின் 'சர்கார்' விஷாலின் 'சண்டக்கோழி 2' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.