'அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறேன்' என்று கூறுபவர்களை உதைப்பேன். மன்சூர் அலிகான்

  • IndiaGlitz, [Saturday,July 01 2017]

நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரி பல துறைகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சினிமாத்துறைக்கு பேரிழப்பு என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:
டாஸ்மாக் சரக்கிற்கும் பெட்ரோலுக்கும் ஜிஎஸ்டி வரி கிடையாது. இதில் இருந்தே இந்த வரிவிதிப்பு எவ்வளவு பெரிய மோசடி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வரியை சில ஊடகங்கள் ஆதரித்து மத்திய அரசுக்கு ஜால்ரா போடுகிறது. இந்த ஊடகங்களையும் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்
ஏற்கனவே உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சினிமாத்துறையினர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் சினிமாக்காரர்களுக்க்கு மட்டுமின்றி பொதுமக்களையும் வாட்டி வதைக்க வந்துள்ளது இந்த ஜிஎஸ்டி
மக்களை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டிக்காக இணைந்த மத்திய அரசும் மாநில அரசும் ஏன் நதிநீரை இணைக்க இணையவில்லை. முதலில் நதிநீரை இணைங்கடா விளக்கெண்ணெய்களா?
ஜிஎஸ்டியால் சினிமா அழிவை நோக்கி செல்லும், இதை எங்களால் ஏற்று கொள்ள முடியாது. மேலும் ஜெயலலிதா இருந்தவரை அவர் ஜிஎஸ்டியையும், நீட் தேர்வையும் எதிர்த்து வந்தார். ஆனால் இன்றைய அரசு எடுபிடி அரசு. எவனாவது அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று கூறினால் உதைப்பேன்' என்றும் ஆவேசமாக கூறினார்.

More News

அண்ணன் இசையில் பாடிய அனுபவம்! ஏ.ஆர். ரஹ்மான் தங்கை பெருமிதம்

ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகியுள்ள 'மாம்' படம் தமிழிலும் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஆஸ்கார் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை தனது தங்கை இஷ்ரத்காதிரி அவர்களை பாட வைத்துள்ளார்...

கத்தியை காட்டி மிரட்டியவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த காவல்துறை அதிகாரி

கதிராமங்கலம் கிராமத்தில் அமைதியாக போராடிய கிராமத்து மக்களை அடித்து விரட்டிய காவல்துறையினர் ஒருபக்கம் இருக்கும் நிலையில் தன்னை கத்தியால் குத்த வந்த ஒருவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தி அவருக்கு தேவையான மருத்துவ உதவி மற்றும் உணவும் வாங்கிக்கொடுத்த ஹாங்காங் காவல்துறை அதிகாரி ஒருவரின் நெகிழ வைக்கும் உதவி குறித்த செய

கடனை எப்படி அடைக்கிறது? 'இவன் தந்திரன்' இயக்குனர் கண்ணீர் பேட்டி

நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் நகராட்சி வரியான 30% கேளிக்கை வரியையும் திரையரங்குகள் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் திரையரங்க கட்டணத்தில் இருந்து 58% வரி மட்டுமே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது...

கதிராமங்கலம் தீ சென்னைக்கும் பரவுகிறதா? மெரீனாவில் திடீர் போலீஸ் குவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் நேற்று ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தின் குழாய்களில் கசிவு ஏற்பட்டு அங்குள்ள வயல்களில் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

திங்கள் முதல் தியேட்டர்கள் மூடல்: நேற்று வெளியான படங்களின் கதி?

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வரும் திங்கள் முதல் தியேட்டர்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் நேற்று அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்