close
Choose your channels

இறந்த பிறகும் பலருக்கு உதவியாக இருந்த மனோபாலா.. மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்..!

Sunday, May 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா கடந்த சில நாட்களுக்கு முன்னாள் உயிரிழந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும் அவரது இறுதி சடங்கின் போது பெரும்பாலான கோலிவுட் திரை உலகை பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மனோபாலாவின் சமுதாய வழக்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிக்கப்படுவது வழக்கமாம். ஆனால் மனோபாலாவின் மனைவி அவருடைய உடைமைகளை எரிக்காமல் அதை அப்படியே அனாதை இல்லத்துக்கு வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.

மனோபாலாவின் நினைவாக அவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தை மட்டும் அவரது மனைவி வைத்துக் கொண்டதாகவும் மற்ற அனைத்து பொருட்களையும் அனாதை இல்லத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மனோபாலா இறந்த பின்னரும் பலருக்கு உதவியாக இருந்திருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment