இறந்த பிறகும் பலருக்கு உதவியாக இருந்த மனோபாலா.. மனைவி செய்த நெகிழ்ச்சியான செயல்..!

  • IndiaGlitz, [Sunday,May 07 2023]

தமிழ் திரை உலகின் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா கடந்த சில நாட்களுக்கு முன்னாள் உயிரிழந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர். மேலும் அவரது இறுதி சடங்கின் போது பெரும்பாலான கோலிவுட் திரை உலகை பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மனோபாலாவின் சமுதாய வழக்கப்படி ஒருவர் இறந்துவிட்டால் அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிக்கப்படுவது வழக்கமாம். ஆனால் மனோபாலாவின் மனைவி அவருடைய உடைமைகளை எரிக்காமல் அதை அப்படியே அனாதை இல்லத்துக்கு வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.

மனோபாலாவின் நினைவாக அவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தை மட்டும் அவரது மனைவி வைத்துக் கொண்டதாகவும் மற்ற அனைத்து பொருட்களையும் அனாதை இல்லத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து மனோபாலா இறந்த பின்னரும் பலருக்கு உதவியாக இருந்திருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் நெகிழ்ச்சி படுத்தியுள்ளது.

More News

சூர்யாவின் 'கங்குவா' குறித்த சூப்பர் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக

ஆகஸ்ட் முதல் அக்டோபர்  வரை.. சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. 

கூஸ்பம்ப்ஸ்.. தனுஷின் 'கேப்டன் மில்லர்' படம் பார்த்த நடிகர் பேட்டி..!

தனுஷ் நடித்த படம் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்த நடிகர் ஒருவர் பேட்டியில் தனக்கு கூஸ்பம்ப்ஸ்

இன்று முதல் 'தி கேரளா ஸ்டோரி' காட்சிகள் ரத்து.. தமிழக தியேட்டர் நிர்வாகம் கூறிய காரணம் இதுதான்..!

 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பு

இரண்டு சிகரங்களுடன் நடித்த தமன்னா.. அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ்..!

திரையுலகில் இரண்டு சிங்கங்களுடன் தமன்னா நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.