'மன்னார் வகையறா' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு விமல் நடித்த 'மாப்பிள்ளை சிங்கம்' படத்திற்கு பின்னர் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் விமல் படம் வெளியாகாத ஆண்டு 2017 மட்டுமே.

இந்த நிலையில் விமல் நடித்த 'மன்னார் வகையறா' திரைப்படம் ரிலீசுக்கு தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த படம் நேற்று தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில் இம்மாத இறுதியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெகுவிரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்

விமல், அஞ்சலி, சூரி, ராதாரவி, பாண்டியராஜன், ஜி.மாரிமுத்து, காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநாதன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தருண்பாலாஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

எச்.ராஜா கடந்த சில மாதங்களில் ரஜினி, கமல், விஜய், விஷால் என திரையுலக பிரமுகர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவருடைய பார்வை கவியரசு வைரமுத்துவின் மீது விழுந்துள்ளது.

தளபதி விஜய் இப்போது எங்கே இருக்கின்றார் தெரியுமா?

தளபதி விஜய் சமீபத்தில் குடும்பத்துடன் லண்டன் சென்ற நிலையில் தற்போது லண்டனில் இருந்து அவர் குடும்பத்துடன் சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய பதவி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகள் தேடி வந்த நிலையில் தற்போது சிக்கிம் முதலமைச்சர் முக்கிய பதவியை அவருக்கு அளித்துள்ளார்.

மெரினா புரட்சியை கையில் எடுக்கின்றார் பாண்டிராஜ்

பாண்டிராஜ் அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த விபரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு திரும்புவோம், ஆனால் பயணிகளிடம் காசு வாங்க மாட்டோம்: போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். அலுவலகங்கள் சென்று வருபவர்கள், மாணவர்கள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.