திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்.. மஞ்சிமா மோகன் பகிர்ந்த புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,December 15 2022]

தமிழ் திரையுலக நட்சத்திரங்களான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை மஞ்சிமா தனது சமூக வலைத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு கௌதம் கார்த்திக் பதிவு செய்த கமெண்ட்ஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் நாயகியான மஞ்சிமாவுடன் காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து மூன்று வருடங்கள் இந்த ஜோடி காதலித்து வந்த நிலையில் இரு தரப்பு பெற்றோர்களும் முடிவு செய்து நவம்பர் 28ஆம் தேதி கௌதம் கார்த்திக் - மஞ்சிமா திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர், ‘திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் என் மூளை என்னை அப்போது கவலை அடைய செய்ததாகவும் ஆனால் என் இதயம் என்னை சிரிக்க சொன்னதாகவும் நான் என் இதயம் சொன்னதை பின்பற்றினேன் என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்த கௌதம் கார்த்திக், ‘நான் எப்போதும் உன்னுடைய புன்சிரிப்பை ரசிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.