close
Choose your channels

கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று வருத்தப்படுகிறேன்: மஞ்சிமா மோகன்..

Tuesday, July 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சில சமயம் கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று வருத்தப்பட்டேன் என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த மஞ்சிமா மோகன், ‘என்னுடைய உடல் எடையை பலர் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என்றும் என்னுடைய ஓவர் வெயிட்டை பார்த்து சிலர் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கமெண்ட் செய்து என்னை அழ வைத்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

ஒரு சிலர் மோசமான கமெண்ட் செய்வார்கள் என்று எனக்கு தெரியும், அது எல்லாம் நாம் பேஸ் பண்ணி விடுவோம், ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அந்த கமெண்ட்களை பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவார்கள்.

இந்த சமயத்தில் தான் நான் கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று கூட எண்ணி வருத்தப்பட்டு உள்ளேன். தனியாளாக நாம் கஷ்டப்படுவதை விட இன்னொருத்தரையும் சேர்த்து கஷ்டப்படுத்துகிறோம் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது என்று கூறினார்.

ஆனால் எனக்கு கிடைத்துள்ள கணவர் எனக்கு முழு ஆதரவாக இருக்கும் நிலையில் சமூக வலைதள கேலி கிண்டல்களை நான் பொருட்படுத்தாமல் நகர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டேன்’ என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment