கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று வருத்தப்படுகிறேன்: மஞ்சிமா மோகன்..

  • IndiaGlitz, [Tuesday,July 16 2024]

சில சமயம் கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று வருத்தப்பட்டேன் என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த மஞ்சிமா மோகன், ‘என்னுடைய உடல் எடையை பலர் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என்றும் என்னுடைய ஓவர் வெயிட்டை பார்த்து சிலர் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கமெண்ட் செய்து என்னை அழ வைத்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

ஒரு சிலர் மோசமான கமெண்ட் செய்வார்கள் என்று எனக்கு தெரியும், அது எல்லாம் நாம் பேஸ் பண்ணி விடுவோம், ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அந்த கமெண்ட்களை பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவார்கள்.

இந்த சமயத்தில் தான் நான் கௌதம் கார்த்திக்கை ஏன் திருமணம் செய்தேன் என்று கூட எண்ணி வருத்தப்பட்டு உள்ளேன். தனியாளாக நாம் கஷ்டப்படுவதை விட இன்னொருத்தரையும் சேர்த்து கஷ்டப்படுத்துகிறோம் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது என்று கூறினார்.

ஆனால் எனக்கு கிடைத்துள்ள கணவர் எனக்கு முழு ஆதரவாக இருக்கும் நிலையில் சமூக வலைதள கேலி கிண்டல்களை நான் பொருட்படுத்தாமல் நகர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டேன்’ என்றும் அவர் கூறினார்.

More News

அம்பானி குடும்ப திருமணத்திற்கு ஏன் செல்லவில்லை.. நடிகை டாப்சி விளக்கம்..!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலகின் பல பிரபலங்கள் வருகை

விஜய் டிவி சீரியலில் என்ட்ரி ஆகும் அனிதா சம்பத்.. இந்த மூன்று பிரபல சீரியல்களில் எது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 3 பிரபலமான சீரியல்களின் பெயரை குறிப்பிட்டு இந்த மூன்றில் ஒரு சீரியலில் தான் என்ட்ரி ஆக இருப்பதாக செய்தி வாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் தனது சமூக

தண்டவாளத்தில் விபரீத போட்டோஷூட்.. ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் விழுந்த பரிதாபம..

ரயில் தண்டவாளத்தில் ஒரு ஜோடி போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரயில் வந்ததை அடுத்து 90 அடி பள்ளத்தில் இருவரும் குதித்த அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒரு வழியாக வெளியான 'விடுதலை 2' அப்டேட்.. சூரி வெளியிட்ட சூப்பர் போஸ்டர்..!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தின் முக்கிய அப்டேட் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

என்னுடைய முதல் படப்பிடிப்பு விஜய்யுடன் தான்..  காத்ரீனா   கைஃப் சொன்ன ஆச்சரிய தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப்  முதன் முதலில் நான் கேமரா முன் தோன்றியது நடிகர் விஜய்யுடன் தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.