மணிரத்னம் - சுஹாசினி தம்பதியின் மகனா இவர்? லண்டன் அலுவலகம் திறப்பு விழா புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் என்பதும் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படம் தமிழ் திரை உலகிலேயே மிக அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, உள்பட பல பிரபலங்களை வைத்து இயக்கிய மணிரத்னம் இன்றும் நம்பர் ஒன் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணையும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் மணிரத்னம் நடிகை சுகாசினியை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவ்வப்போது சுகாசினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகனின் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது தனது மகன் லண்டனில் புதிய அலுவலகம் திறந்து உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் குஷ்பு உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.

இந்த புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு சுகாசினியின் மகனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.