close
Choose your channels

தமிழில் மட்டும் ஏன் 'நாராயணா' இல்லை: 'பொன்னியின் செல்வன்' குறித்து மணிரத்னம் அளித்த விளக்கம்!

Tuesday, September 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30-ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் மணிரத்னம் பதிலளித்தார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிரைலரில் உள்ள ஒரு காட்சி சர்ச்சைக்குரியதாக மாறிய நிலையில் அது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் அம்புகள் ஆழ்வார்க்கடியான் மேல் பாயும்போது அவர் தமிழில் மட்டும் ’அய்யோ’ என்று கூறுவதும் மற்ற அனைத்து மொழிகளிலும் ’நாராயணா’ என கூறுவதும் ஏன் என்று செய்தியாளர்களில் ஒருவர் கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், ‘மாற்றம் இல்லாமல் எந்த ஒரு திரைப்படத்தையும் உருவாக்க முடியாது என்றும் ஆழ்வார்க்கடியான் கேரக்டர் படம் முழுவதும் நாராயணா நாராயணா என்று தான் சொல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாவலின் ஐந்து பாகங்களை இரண்டு படங்களாக கொண்டுவர வேண்டுமென்றால் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும், அப்படியே எடுக்க வேண்டுமென்றால் வெப்சீரிஸ் ஆகத்தான் எடுக்க வேண்டும் என்றும், சினிமா என்பது குறைந்த நேரத்தில் அதிகமாக சொல்லக்கூடிய ஒரு மீடியா என்றும், எனவே அதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் கூறினார். ஆனால் இந்த படத்தில் கல்கி எழுதிய நாவலின் உயிரோட்டம் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கலைஞர் கருணாநிதி அவர்களே வைரமுத்துவை தமிழின் அடையாளமாக அருகில் உட்கார வைத்துக் கொள்வார் என்றும், ஆனால் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வைரமுத்துவை பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது மணிரத்னம் பதில் கூறிய போது ’தமிழ் என்பது பல அறிஞர்களால் கலைஞர்களால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு மொழி என்றும், வைரமுத்து அவர்கள் மிகப் பெரிய கவிஞர் என்பது உண்மைதான் என்றும், அவருடன் நான் பல படங்களில் பணிபுரிந்து உள்ளேன் என்றும், ஆனால் அவரையும் தாண்டி இன்னும் நிறைய பேர் தமிழில் திறமையானவர்கள் இருக்கின்றார்கள், இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுடைய திறமைகளும் வெளியே வரவேண்டும் என்பதற்காகவும் நான் புதியவர்களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்து உள்ளேன் என மணிரத்னம் கூறினார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment