மணிரத்னம் படத்தில் பிரபல நடிகையின் கணவர்?

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

'ஓகே கண்மணி' வெற்றிப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

முதலில் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ருதிஹாசன் ஆகிய நால்வர் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த நால்வருமே இப்போது படத்தில் இல்லை. இந்த நால்வரும் ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில் தற்போது இந்த படத்தில் நானி மற்றும் சாயாமி கேர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல மலையாள நடிகரும் நடிகை நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக மணிரத்னம் 'வெள்ளை பூக்கள்' என்ற டைட்டிலை பிலிம் சேம்பரில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகிறது.