close
Choose your channels

மணிரத்னம்சுஹாசினி தம்பதியின் மகத்தான முடிவு

Monday, January 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று சாகா' என்ற தொண்டு நிறுவனம். இந்நிறுவனம் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் சாகா தொண்டு நிறுவனம் 'சாகாவரம்' என்ற இசை நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் மணிரத்னம், சுஹாசினி, சுஹாசினியின் பெற்றோர் சாருஹாசன், கோமளம் ஆகியோர் கலந்து கொண்டன.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியினரும், சாருஹாசன் - கோமளம் தம்பதியினரும் உடல்தானம் செய்வதாக அறிவித்தனர். அவர்களுடைய இந்த மகத்தான முடிவுக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் பிரசன்னா, சினேகா சாந்தனு பாக்யராஜ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்குநர்கள் பார்த்திபன், வசந்த் சாய், சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment