மணிரத்னம்சுஹாசினி தம்பதியின் மகத்தான முடிவு

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று சாகா' என்ற தொண்டு நிறுவனம். இந்நிறுவனம் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் சாகா தொண்டு நிறுவனம் 'சாகாவரம்' என்ற இசை நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் மணிரத்னம், சுஹாசினி, சுஹாசினியின் பெற்றோர் சாருஹாசன், கோமளம் ஆகியோர் கலந்து கொண்டன.

இந்த நிகழ்ச்சியின் முடிவில் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியினரும், சாருஹாசன் - கோமளம் தம்பதியினரும் உடல்தானம் செய்வதாக அறிவித்தனர். அவர்களுடைய இந்த மகத்தான முடிவுக்கு அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் பிரசன்னா, சினேகா சாந்தனு பாக்யராஜ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்குநர்கள் பார்த்திபன், வசந்த் சாய், சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More News

ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீஸ் பிடிபட்டாரா? பரபரப்பு தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி தினத்தன்று மாணவர்களை போலிசார் கலைக்க முயன்றனர்...

முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் வைத்த மூன்று கோரிக்கைகள்

மாணவர்கள் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து பெரும் உதவி செய்து வந்தவர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. போராட்டத்தின் கடைசி நாளன்று ஏற்பட்ட வன்முறையின்போதும் அவர் பதட்டத்தை குறைக்க மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையும் அனைவரும் அறிவோம்...

பார்வையற்றவர்களுக்காக சிறப்பு சலுகை செய்த 'அதே கண்கள்' தயாரிப்பாளர்

கலையரசன் நடிப்பில் சி.வி.குமார் தயாரித்த 'அதே கண்கள்' திரைப்படம் கடந்த குடியரசு தினத்தில் வெளியாகி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நிவின்பாலி-நட்டி நட்ராஜ் பட டைட்டில் அறிவிப்பு

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் தமிழ் படம் ஒன்றை அறிமுக இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி அறையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை. செல்போன் கேமிராவில் வீடியோ பதிவு

கேரள மாநிலத்தில் கள்ளக்காதல் ஜோடி தனத்தனியாக ஒரே நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலையை இருவரும் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...