close
Choose your channels

திடீரென மயங்கி விழுந்த 'மங்காத்தா' தயாரிப்பாளர்.. அப்பல்லோ மருத்துவமனை தந்த அதிர்ச்சி தகவல்..

Thursday, March 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘மங்காத்தா’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகனுமான துரை தயாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சகோதரர் முக அழகிரி மகன் துரை தயாநிதி, ‘அழகர்சாமியின் குதிரை’ ’தமிழ்ப்படம்’ ’தூங்கா நகரம்’ ’மங்காத்தா’ உட்பட சில படங்களை தயாரித்து உள்ளார்

இவர் சென்னையில் தனது வீட்டில் திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்ததாகவும் இதனை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை அடுத்து அதற்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது

கடந்த இரண்டு மாதங்களாக அவர் கோமாவில் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலையும் இதுவரை மருத்துவமனையோ அல்லது அவரது குடும்பத்தினரோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ஒரு சிலர் துரை தயாநிதியை சந்தித்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. துரை தயாநிதிக்கு உண்மையில் என்ன என்பது குறித்து விரைவில் அவரது குடும்பத்தினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment