முஸ்லீம் சிறுமியை தத்தெடுத்த வாலிபருக்கு 16 கத்திக்குத்து

  • IndiaGlitz, [Saturday,June 30 2018]

முஸ்லீம் சிறுமி ஒருவரை தத்தெடுத்த நபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று 16 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த பாப்பாலால் ரவிகாந்த் என்பாவர் கோயில்களுக்கு வர்ணம் பூசும் பணியை செய்து வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு ஐதராபாத்தில் வெடிகுண்டு சம்பவத்தால் பெற்றோரை இழந்த சானியா என்ற முஸ்லீம் பெண் குழந்தையை ரவிகாந்த் மற்றும் அவரது மனைவியும் தத்தெடுத்தனர். இந்துக்கள் பெரும்பாலும் வசிக்கும் அந்த பகுதியில் முஸ்லீம் குழந்தையை தத்தெடுத்த இந்த தம்பதியினர்களுக்கு கடும் எதிர்ப்புகள் இருந்து வந்தது.

இந்த நிலையில் சானியாவை அந்த பகுதி இளைஞர்கள் அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும் இதனை ரவிகாந்த் கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரவிகாந்த் தனது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் ரவிகாந்தை கத்தியால் சரமாரியாக குத்தினர். மொத்தம் 16 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் மிதந்த ரவிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து ரவிகாந்த் மற்றும் மனைவி கூறும்போது எத்தனை எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள் வந்தாலும் சானியாவை கைவிடப்போவதில்லை என்றும் சானியாவும் எங்கள் குழந்தைகளில் ஒருவர் என்றும் கூறினர். இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ரவிகாந்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

More News

கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் யார்? போலீசார் விசாரணை

கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீபாவளி ரேஸில் ஐந்து முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸா?

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'சர்கார்', அஜித்தின் 'விசுவாசம்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய திரைப்படங்கள் வெளியாகலாம் என்று கூறப்பட்டது.

'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு    

இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் தனது திறமையான திரைக்கதையை வைத்து இயக்கிய திரைப்படம் '8 தோட்டாக்கள்'. துப்பாக்கியைப் பறிகொடுக்கும் இளம் போலீஸ் அதிகாரியையும்,

தியேட்டரில் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்றவரை தாக்கிய அரசியல்வாதி

சமீபத்தில் தியேட்டர் கட்டணம், பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டது தெரிந்ததே. இத்துடன் சேர்த்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கு வேறு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த  நடிகர் பிரபு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் பேசியபோது, 'நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட உள்ளதாக அறிவித்தார்.