close
Choose your channels

இளம் பெண்ணை கடத்தி 14 வருடம் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த காம கொடூரன்?

Thursday, August 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஷ்யாவில் 19 வயதாக இருக்கும்போது காமக் கொடூரன் ஒருவரிடம் மாட்டிக்கொண்ட இளம்பெண் 33 வயதில் தப்பித்து வெளியே வந்த நிலையில் நெஞ்சை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் வசித்துவந்த எகடெரினா எனும் 19 வயது இளம் பெண் ஒருவரிடம் விளாடிமிர் செஸ்கிடோவ் என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் வீட்டிற்கு வா, மது அருந்தலாம் என்று கூப்பிட்டதால் அதைக் கேட்டு அவருடன் சென்ற எகடெரினாவை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். எப்போதும் படுக்கை அறைக்குள்ளேயே வைத்திருந்த நிலையில் எப்போதாவது ஓய்வறைக்கு வந்தாலும் கத்தி முனையிலேயே மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 14 வருடங்களுக்குப் பிறகு 51 வயதான செஸ்கிடோவ் தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வீட்டை விட்டு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண் எகடெரினா தன்னை 14 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்ததாகவும் 1,000 முறைக்கும் மேலாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

மேலும் படுக்கை அறையை விட்டு எதாவது விஷயங்களுக்காக வெளியே வந்தாலும் கத்தி முனையிலேயே தன்னை வைத்திருந்ததாகக் கூறிய அவர் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் தன்னை அரக்கத்தனமாக அவர் அடித்துத் துன்புறுத்தினார். என்னைத் தவிர கடந்த 2011 இல் வேறொரு பெண்ணையும் பாலியல் அடிமையாக அழைத்து வந்தார். ஆனால் அந்தப் பெண் செஸ்கிடோவிடம் சண்டைப் போட்டதால் அடித்தே அந்தப் பெண்ணை கொன்றார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து செஸ்கிடோவின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் வீட்டின் அடிப்பகுதியில் இருந்து மனித எலும்புகளைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருடைய வீட்டில் செக்ஸ் பொம்மைகள், பாலியல் வீடியோக்கள் அடங்கிய சிடிக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து இளம்பெண்ணை கடத்தி 14 வருடங்களாக பாலியல் அடிமைப்போன்று நடத்திய குற்றத்திற்காக செஸ்கிடோ கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய மனநலம் பாதிப்படைந்து இருப்பதால் தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 19 வயதில் கடத்தப்பட்ட இளம்பெண் 33 வயதில் பல கொடுமைகளுக்குப் பிறகு வெளியே வந்திருக்கும் சம்பவம் பலரது நெஞ்சை பதற வைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment