ஆஸ்கார் விருது வாங்கிய ஒருசில நிமிடங்களில் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

நேற்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி என்ற படத்தில் சிறப்பாக நடித்த Frances McDormand என்பவர் தேர்தெடுக்கப்பட்டு அவருக்கு விருது அளிக்கப்பட்டது. இந்த விருது தன் வாழ்நாள் கனவு என்று அவர் கூறி மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்தார். 

இந்த நிலையில் விருது வழங்கும் விழா முடிந்ததும் நடந்த பார்ட்டியில் ந்டிகை Frances McDormand கலந்து கொண்டார். இந்த பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவரது விருதை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது கண்களில் கண்ணீரும் எட்டிப்பார்த்தது

இந்த நிலையில் இதுகுறித்து விழாக்குழுவினர் காவல்துறையினர்களிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார் ';இது எனக்கு கிடைத்த விருது' என்று போதையில் உளறிக்கொண்டிருந்த 47 வயது டெர்ரி பிரையண்ட் என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர் அந்த விருதை நடிகையிடம் இருந்து திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த விருதை நடிகையிடம் காவல்துறையினர் ஒப்ப்டைத்தனர். கைது செய்யப்பட்ட டெர்ரி பிரையண்ட் சமையல் குறிப்புகள் எழுத்தாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 

More News

செல்வராகவனின் NGK-க்கு இத்தனை அர்த்தமா?

செல்வராகவன் படம் தான் யோசிக்க வைக்கும் என்றால் இவருடைய அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே ரொம்ப யோசிக்க வைக்கின்றது.

அர்ஜூன் ரெட்டி' நாயகனின் முதல் தமிழ் படம்

கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விஜய்சேதுபதியின் 'ஜூங்கா'

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றான 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது

இன்று லெனின் சிலை, நாளை பெரியார் சிலை: எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த பாஜக, வரும் 8ஆம் தேதி தான் பதவியேற்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே பாஜகவினர் அந்த மாநிலத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக

ஆஸ்கார் இல்லாவிட்டால் என்ன? அள்ளி அள்ளி வழங்கப்பட்ட பரிசுகளால் திணறிய நட்சத்திரங்கள்

நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் விருதுகளை பெற்ற நட்சத்திரங்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் என்பதும் தெரிந்ததே