கார் விபத்து எதிரொலி: யாஷிகா மீது போலீஸ் எடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கை!

  • IndiaGlitz, [Monday,July 26 2021]

நடிகை யாஷிகா தனது தோழி மற்றும் நண்பர்களுடன் சென்ற கார் நேற்று முன்தினம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும், யாஷிகாவும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்துவரும் போலீசார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் விசாரணை செய்ததாகவும் விசாரணையில் யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் கார் ஓட்டும் போது மது அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் யாஷிகா மீது அதிவேகமாக காரை ஓட்டி உயிரிழப்பு ஏற்பட செய்தல் என்பது உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த அதிரடியாக யாஷிகாவின் ஓட்டுனர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மாமல்லபுரம் அருகே நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செல்போன் வேவு பார்க்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு… பெகாசஸ் வெளியிட்ட அதிரடி பதில்!

பெகாசஸ் உளவுக் கருவிகள் உள்ளதால்தான் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதாக அதனைத் தயாரித்த

காதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்ட இளைஞர்… வன்முறையில் முடிந்த சம்பவம்!

பீகார் மாநிலத்தில் தன் வீட்டு பெண்ணை காதலித்த 18 வயது இளைஞர் ஒருவரை ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்துள்ளனர்.

பா ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்: 'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து நடிகர் நாசர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை திரை உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர்.

இறந்த பின்பு குறட்டை விட்டு தூங்கிய நபர்… மருத்துவர்களே வியந்துபோன அதிசயம்!

ஸ்பெயின் நாட்டில் சிறையில் இருந்த ஜிமென்ஸ் எனும் நபர், உயிரிழந்த

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரின் பேத்தி நடிகை தன்யா ராம்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.