சபர்ணாவை அடுத்து மற்றொரு நடிகை மரணம். அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Sunday,November 13 2016]

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை அபர்ணா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர்கள் மீளவில்லை. ஆனால் அதற்குள் இன்னொரு நடிகையின் மரண செய்தி வந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

பிரபல மலையாள நடிகை ரேகா மோகன் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அபார்ட்மெண்ட் வீடு ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள ரேகா மோகனின் கணவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் தொலைபேசி அழைப்பிற்கு எந்தவித பதிலும் இல்லாததால் அவருடைய புகாரை அடுத்து போலீஸார் அவருடைய வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் மரணம் அடைந்ததாக தெரிய வந்துள்ளது. மரணம் அடைந்த ரேகா மோகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்த பின்னரே அவரது மரணத்திற்கு காரணம் குறித்து தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

45 வயதான ரேகா மோகன் மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் உள்பட பிரபல நடிகர்கள் பலருடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த நடிகை ரேகா மேனனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.