தனுஷின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

இந்த ஆண்டு தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அவர், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளார்’ இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கவிருப்பதாகவும், வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள எழுத்தாளர்களான சர்ஃபு மற்றும் சுகாஸ் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வர்தன்’ மற்றும் ’வைரஸ்’ ஆகிய படங்களில் திரைக்கதை வசன கர்த்தாவாக பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் நரேனுடன் இணைந்து சர்ஃபு மற்றும் சுகாஸ் இந்த படத்திற்கு திரைக்கதை அமைப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகர் பிரசன்னா நடிக்கவிருக்கிறார் என்பதும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

பிரபல நடிகரின் படத்தில் வில்லன் ஆனார் கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் 'கோலிசோடா 2' உட்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

மகன், மருமகளுடன் திடீரென ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசு: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கிய அரசியல் களத்தில் இறங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் தற்போது பிரபலமாக உள்ள கட்சிகளிலிருந்து பலர் இணைவார்கள்

தற்கொலை செய்யுமளவுக்கு என் அப்பா கோழை இல்லை..! அம்ருதா.

நான் ப்ரணையை திருமணம் செய்தால் சொத்தையெல்லாம் தன் பேருக்கு எழுதிக் கொடுக்குமாறு எனது சித்தப்பா ஷ்ரவன் குமார் சொல்லியுள்ளார். இது விஷயமாக ஏற்கனவே எனது அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் தகராறு ஏற்பட்டது.

மோடி அரசின் அடுத்த அட்டாக்.. A-யில் தொடங்கும் வங்கியா..?! சுப்பிரமணியன் சுவாமி.

வங்கிகளை RBI உடன் இணைப்பது எந்த பயனையும் தராது எனவும்.. இந்த மோசமான போருளாதர நிலையால் அடுத்தடுத்து திவாலாக 10 வங்கிகள் வரிசையில் நிற்கின்றன.

கொரோனா அச்சம்: வாரணாசி கோவிலில் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்ட முகக்கவசம்!!!

கொரோனா பற்றிய அச்சம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. தற்போது, புகழ்பெற்ற வாரணாசி சிவன் தலத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் அர்ச்சகர் ஒருவர் முகக் கவசத்தை அணிவித்து உள்ளார்.