நேற்று ரிலீஸ் ஆன படத்தின் இயக்குனர் இன்று மரணம்

  • IndiaGlitz, [Saturday,February 27 2016]

பிரபல மலையாள இயக்குனர் ராஜேஷ்பிள்ளை இயக்கிய 'வேட்டா' (Vettah) என்ற திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இன்று அவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருடைய மறைவு மலையாள திரையுலகினர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


கடந்த 2011ஆம் ஆண்டு ராஜேஷ் பிள்ளை இயக்கிய மலையாள திரைப்படமான 'டிராபிக்' என்ற படம் சரத்குமார் நடிப்பில் 'சென்னையில் ஓருநாள்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் என்பவரது இதயம் பெங்களூரில் உள்ள ஒரு சிறுமிக்கு மாற்றம் செய்யப்பட்ட உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில்தான் இந்த படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் அமலாபால் நடித்த 'மிலி' என்ற வெற்றிப்படத்தையும் ராஜேஷ்பிள்ளை இயக்கியிருந்தார். இந்நிலையில் ராஜேஷ்பிள்ளை இயக்கத்தில் மஞ்சுவாரியர் நடித்த 'வேட்டா' படம் நேற்றுதான் ரிலீஸ் ஆனது. ரிலீஸான மறுநாளே இந்த படத்தின் இயக்குனர் மரணம் அடைந்தது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜேஷ் பிள்ளை அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

More News

'இருமுகன்' படத்தில் விக்ரமின் இரண்டு கேரக்டர்கள்

'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருமுகன்' திரைப்படத்தில் முதல்முறையாக விக்ரம் இருவேடங்களில் நடித்து வருகிறார்...

'தெறி' டப்பிங்கை முடித்தார் சமந்தா

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்யாவின் அடுத்த பட நாயகி கேதரின் தெரசா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ்' படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை...

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குத்துச்சண்டை நாயகி

விஜய்சேதுபதி நடித்த 'நானும் ரெளடிதான்', 'சேதுபதி' ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றுள்ளதை அடுத்து வரும் மார்ச் 11-ஆம்...

மனைவியை அழவைக்க விரும்பாத ஆடுகளம் முருகதாஸ்

'வெற்றிமாறன்' இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களால்...