கொரோனா வைரஸால் தள்ளி போன பிரபல நடிகையின் திருமணம்!

  • IndiaGlitz, [Sunday,March 15 2020]

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாள்களாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிரபல மலையாள நடிகை உத்தரா உன்னி என்பவரின் திருமணம் தள்ளிப் போயுள்ளது.

பழம்பெரும் மலையாள நடிகை ஊர்மிளாவின் மகள் உத்தரா உன்னி. இவர் தமிழில் ’வவ்வால் பசங்க’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஒருசில மலையாள படங்களிலும் நடித்துள்ள இவர் ஒரு பரத நாட்டிய கலைஞர் என்பதும் கொச்சியிலொ ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை உத்தரா உன்னிக்கும், நிதேஷ் நாயர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமணம் கொச்சியில் அடுத்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனோ வைரஸ் காரணமாக இந்த திருமணம் தள்ளிப் போயிருப்பதாக உத்ரா உன்னி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உத்தரா உன்னி தெரிவித்ததாவது: ‘எங்கள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நீங்கள் ஏற்கனவே டிக்கெட் புக் செய்து வைத்திருப்பீங்கள். இருந்தாலும் இதை சொல்வதற்கு வருந்துகிறோம். குறிப்பிட்ட நாளில் எங்களின் தாலிகட்டு நிகழ்ச்சி கோவிலில் வைத்து நடைபெறும். அதுகுறித்த அறிவிப்பை தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று தெரிவித்து இருந்தாலும் அவர் தனது திருமண நாளை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.