'சூர்யா 44' படத்தில் இணையும் 'தக்லைஃப்' பிரபலம்..! பான் - இந்திய படமா?

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ‘சூர்யா 44’ படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் நியமனம் செய்யப்படுவார் என்றும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் கடந்த 25 ஆண்டுகளாக அவர் மலையாளத் திரை உலகில் பிரபல நடிகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இன்றி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜெகமே தந்திரம்’ சிவதாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘சூர்யா 44’ படத்தின் ஜோஜூ ஜார்ஜ் இணைவதை அடுத்து வேறு சில முன்னணி நடிகர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படம் அனேகமாக ஒரு பான் இந்திய படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

மாதம்பட்டி ரங்கராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சுஜித்ரா

ரங்கராஜ் அவர்கள்,சுஜித்ரா அவர்கள் எங்களோட நம்பிக்கையின் நட்சத்திரம்.அவங்க அவங்களோட பெஸ்ட்ட நல்லாவே கொடுக்குறாங்க.கூடிய சீக்கிரமே லைவ்வா ஒரு கிராண்ட் டின்னர் பண்ணி கொடுக்குறேன்...

தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம்.. ஹீரோவாக மாறிய தயாரிப்பாளர்..!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளரே இரண்டாம் பாகத்தின்

தேர்தலில் வெற்றி யாருக்கு? ஐபிஎல் வின்னர் யார்? ஜோசியராக மாறிய 'கோலங்கள்' நடிகரின் கணிப்பு..!

திருச்செல்வன் இயக்கத்தில் உருவான 'கோலங்கள்' என்ற சீரியலில் நடித்த நடிகர் தற்போது ஜோதிடராக மாறியுள்ள நிலையில், நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்?

அட்சய திருதியை தினத்தில் காது குத்திய 52 வயது காமெடி நடிகர்.. கடா விருந்து எப்போது?

நேற்று அட்சய திருதியை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 52 வயது காமெடி நடிகர் ஒருவர் காது குத்திய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது

பல வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் மோகன்.. 'ஹரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் மோகன் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவர் நடித்த 'ஹரா' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.