விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதிக்கு பிரபல இயக்குனர் கொடுத்த பட்டம்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

நடிகர் விஜய்சேதுபதி பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான 'தர்மதுரை' படத்தில் நடித்தபோது அவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை கொடுத்தார். இந்த பட்டம் தற்போது விஜய்சேதுபதிக்கு நிரந்தரமாகிவிட்டது. அவருடைய ரசிகர்களும் ஊடகங்களும் விஜய்சேதுபதியை மக்கள் செல்வன் என்றே அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் 'கண்ணே கலைமானே' என்ற படத்தை சீனுராமசாமி இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் 'கண்ணே கலைமானே' படத்தை முழுவதுமாக பார்த்த சீனுராமசாமி தனது டுவிட்டரில் 'கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே அழைக்கத் தோன்றியது' என்று கூறியுள்ளார். எனவே விஜய்சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' பட்டம் நிலைத்தது போல் உதயநிதிக்கு 'மக்கள் அன்பன்' என்ற பெயர் நிலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் உதயநிதி தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த பட்டம் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More News

பெற்ற தாயை மதுவுக்காக கொலை செய்த மகன்

குடிகார மகனை தாய் கண்டிப்பதைத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மதுவுக்காக மல்லுக்கட்டி பெற்ற தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

ஐபிஎல் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளும் நடிகர்களின் விபரங்கள்

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு உற்சாகமாக உள்ளனர்.

ஸ்மித், வார்னருக்கு ஒராண்டு தடை: ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாது

சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் கையும் களவுமாக பிடிபட்டதால்

பிரபல நடிகரின் முன்னாள் மனைவி வீட்டில் 170 சவரன் நகை திருட்டு

பிரபல நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவருடைய சகோதரர் நாகராஜ் என்பவர் சென்னை தி.நகரில் வசித்து வருகிறார். கிரகலட்சுமிக்கு என தனி அறை நாகராஜ் வீட்டின் எதிரே உள்ளது.

விவசாயி ஆகவே மாறிவிட்ட கார்த்தி

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தி, ஒரு விவசாயி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.