இது என்ன நாட்டுக்கு முக்கியமான விஷயமா?  வேடிக்கை பார்ப்போம்.. மணிமேகலை பிரச்சனை குறித்து விஜய் டிவி பிரபலம்..!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகிய நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மாபாகா, இது என்ன, நாட்டுக்கு முக்கியமான விஷயமா? நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை திடீரென விலகினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் தன்னுடைய வேலையில் தலையிட்டதாகவும், தனது தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பாதிப்பு ஏற்பட்டால், அப்படி ஒரு சூழலில் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, என்றும் ஆவேசமாக தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாடகி சுசித்ரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் டிவியின் இன்னொரு பிரபல தொகுப்பாளரான மாகாபா இந்த பிரச்சனை குறித்து கூறிய போது, ’அந்த ஷோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, நான் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை. அவங்க ரெண்டு பேரும் தானே அடிச்சுக்கிட்டிருங்கா, நாம் காட்டு வழியாகப் போகும்போது இரண்டு யானைகள் சண்டை போட்டால், நாம் சமாதானம் செய்ய போகக் கூடாது. அந்த ரெண்டும் சேர்ந்து நம்மை நசுக்கிடும். நாம் வேடிக்கை மட்டும் பார்ப்பது தான் நல்லது. இது என்ன, நாட்டுக்கு முக்கியமான பிரச்சனையா? என்று பதில் அளித்தார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

'மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மூன்று முடிச்சு" தொடர், தொடங்கிய இரண்டே வாரங்களில் டிஆர்பியில் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. மேலும், தற்போது

இன்று பெரியார், மோடி பிறந்த நாள்.. விஜய் வாழ்த்து சொன்னது யாருக்கு தெரியுமா?

இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் என்ற நிலையில், விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2ஆம் பாகமாகிறது மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்..அவரே தெரிவித்த தகவல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "வாழை" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது

உதை கிடைக்கு பாத்துக்க என கமலிடமும், வெய்யில் தாங்கமுடியலபா சீக்கிரம் ஷூட் முடி என ரஜினியிடமும் சொன்ன சுமித்ரா....

நடிகை சுமித்ரா கேரள திருச்சூரில் பிறந்தவர். 1970 களில் நடிகையாக முன்னணி ஹீரோக்களுடன் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2' இயக்குனர் இவர்தான்: இன்னொரு ரூ.100 கோடி வசூல் உறுதியா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியாகி சிறப்பான வரவேற்பை வசூலையும் பெற்றது.