'அமரன்' படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவியின் எமோஷனல் பதிவு.. ராஜ்குமார் பெரியசாமியின் ரியாக்சன்..!

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் எமோஷனல் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 23 வது படமான 'அமரன்’ படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே இந்த படம் இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு கதையாக தான் இருக்கும் என்று ரசிகர்களால் யூகிக்கப்பட்டது. முகுந்த் அவர்களின் வீர மரணத்தை பெருமைப்படுத்தும் வகையில் இந்த படம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் 'அமரன்’ படம் குறித்து முகுந்த் அவர்களின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.

அதில் 'அமரன்’ என்ற பெயர் எப்போதும் என் மனதில் நிறைந்திருக்கும் ஒரு சொல், இதை எப்படி சொல்வது என்று ஆயிரக்கணக்கான முறை நான் யோசித்து இருக்கிறேன். இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எனது கணவரின் நினைவு, தேச பக்தியை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். அழியாத துக்கம், எல்லையற்ற அன்பு, மாறாத நம்பிக்கை கலந்த உற்சாகம் ஆகியவற்றுடன் இந்த படத்தை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒரு அன்பான ஆத்மாவை எங்கள் குடும்பம் ஒரு உயர்ந்த காரணத்திற்காக இழந்த நிலையில் அந்த துக்கத்தை நாங்கள் தாங்கிக் கொண்டு வலிமையோடு நிற்கிறோம். ஜெய்ஹிந்த்! பதிவு செய்துள்ளார்.

இந்த எமோஷனல் பதிவுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதிலளிக்கையில் ’என்னையும் என்னுடைய குழுவையும் நம்பி இந்த பெரிய பொறுப்பை கொடுத்த முகுந்த் அவர்களின் மனைவி இந்து அவர்களுக்கு நன்றி! மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரின் தன்னலமற்ற சேவைக்கு என்றும் நாங்கள் கடமை பட்டு இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

வருங்காலத்தில் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்: பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ்..!

தனது தந்தையை எஸ்பி பாலசுப்பிரமணியன் குரலை தனது அனுமதி இன்றி பயன்படுத்திய பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

'கேப்டன்' மறைந்த சோகம்.. மனதை தேற்றி கொண்டு மீண்டும் களத்தில் இறங்கிய  சண்முக பாண்டியன்..!

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மகன் சண்முக பாண்டியன் தந்தை மறைவை அடுத்து மனதை தேற்றிக்கொண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல

சென்னை கல்லூரியில் திடீர் விசிட் அடித்த சமந்தா.. மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு..!

நடிகை சமந்தா சென்னையில் உள்ள கல்லூரிக்கு திடீர் விசிட் அடித்த நிலையில் மாணவ மாணவிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

'தலைவர் 171' படப்பிடிப்பு எப்போது? 'லியோ 2' உருவாகுமா? லோகேஷ் கொடுத்த அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தின் படப்பிடிப்பு எப்போது மற்றும் விஜய்யின் 'லியோ 2' உருவாகுமா? ஆகிய கேள்விகளுக்கு இன்று நடந்த நிகழ்ச்சியின் போது லோகேஷ் கனகராஜ் அப்டேட்

ஸ்பெஷல் பிரியாணியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. யாருடன் தெரியுமா?

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து