வங்கிக்கணக்கு முடக்கம் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வங்கிக்கணக்கை நேற்று ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியதாகவும், அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இதுகுறித்து மகேஷ்பாபுவின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

'ஜி.எஸ்.டி அலுவலகத்தின் அறிக்கையின்படி கடந்த 2007-08ம் ஆண்டில் விளம்பர தூதராக இருந்ததற்கான சேவை வரியை மகேஷ்பாபு கட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய காலத்தில் விளம்பர தூதர் சேவைக்கு சேவைவரி விதிக்கப்படவில்லை. விளம்பர தூதருக்கான சேவை வரி கடந்த 2010-ம் ஆண்டில்தான் விதிக்கப்பட்டது

'வரி கட்டுவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

பிரமாண்ட இயக்குனரின் மகன் திருமண நிகழ்ச்சியில் அனுஷ்கா

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி ' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

அமெரிக்காவில் புது உற்சாகத்துடன் கேப்டன்: வைரலாகும் புகைப்படங்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும்,

தமிழகம் எனக்கு செய்த உதவி: சென்னை விழாவில் தல தோனி பேச்சு

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எழுதிய 'காபி டேபிள் என்ற' புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

குழந்தை பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மரண தண்டனையை உலகின் பல நாடுகள் தவிர்த்து வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை அமலில் உள்ளது.

முடிவுக்கு வந்தது அர்ஜூனின் அடுத்த படம்

ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் 2018ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று.