இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை: 'ஓமை காட்' படகுழுவினர் இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,July 19 2020]

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்பட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ’ஓமை கடவுளே’. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெருங்கிய தோழியான ரித்திகாவை திருமணம் செய்த அஸ்வின், அந்த திருமணத்தை முறித்துக் கொள்ள நீதிமன்றம் செல்வதும், அதன் பின்னர் கடவுள் அவர் முன் தோன்றி அவருக்கு அறிவுரை கூறுவதும், கடைசியில் திருமணம் செய்த தோழிதான் தனக்கு சரியானவர் என்பதை முடிவு செய்து விவாகரத்தை அவர் திரும்ப பெருவதுமான இந்த கதை மிகப்பெரிய வெற்றி பெற்றது.

லாக்டவுன் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இந்த திரைப்படம் வெளிவந்த போதிலும் திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்தது. லாக்டவுன் ஆரம்பித்த பின்னர் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை சென்று அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்த நிலையில் தற்போது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

’ஓமை கடவுளே’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தான் ரசித்ததாகவும், அனைவரும் சிறப்பாக நடித்துள்ளதாகவும், குறிப்பாக அஸ்வினின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மகேஷ்பாபு இந்த பதிவிற்கு அசோக் செல்வன், இயக்குனர் அஸ்வத், வாணிபோஜன், ரித்திகா சிங் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் இதை விட பெரிய பாராட்டு தங்களுக்குத் தேவையில்லை என்றும் தங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘ஓமை கடவுளே’ படத்தை மகேஷ்பாபு பாராட்டியது சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தில் திருட்டு: சென்னையில் பரபரப்பு

சென்னையில் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம கும்பல் ஒன்று பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஃபேஸ்புக் மூலம் வீசிய காதல் வலை: இளைஞரிடம் ஏமாந்த 28 வயது திருமணமான பெண்!

ஃபேஸ்புக் மூலம் பேசிய காதல் வலையில் விழுந்த திருமணமான 28 வயது பெண் ஒருவர், 30 சவரன் நகை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சின்னத்திரை படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து: நூலிழையில் உயிர்தப்பிய நடிகர், நடிகைகள்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருந்துவரும் காரணத்தால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன

இன்று ஒரே நாளில் 88 பேர் பலி: அதிகரிக்கும் கொரோனா பலியால் பரபரப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

15 வயது மாணவனுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய 29 வயது ஆசிரியை!

29 வயது ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்து வந்த 15 வயது மாணவனுக்கு ஆபாசப்படம் அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது