'குண்டூர் காரம்' படத்தில் பீடி குடிக்கும் காட்சி.. மகேஷ் பாபு கொடுத்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Tuesday,January 16 2024]

நடிகர் மகேஷ்பாபு நடித்த ‘குண்டூர் காரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் அதேபோல் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் மகேஷ்பாபு பீடி குடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளதால் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மகேஷ் பாபு போன்ற பெரிய நடிகர்கள் பீடி புகைப்பது போல் நடித்தால் இளைய சமுதாயம் அவரை பார்த்து தவறான முன்னுதாரணத்தை கொண்டு வருவார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தனர்

இதுகுறித்து சமீபத்தில் மகேஷ் பாபு விளக்கம் அளித்துள்ளார். ‘குண்டூர் காரம்’ படத்தில் தான் பயன்படுத்திய பீடி உண்மையான பீடி அல்ல என்றும் அது ஆயுர்வேதத்தில் செய்யப்பட்டது என்றும் அதில் புகையிலை சார்ந்த பொருட்களுக்கு பதிலாக லவங்கப்பட்டைகளால் செய்யப்பட்ட பொருட்கள் இருக்கும்’ என்றும் அவர் கூறினார்.

’முதலில் தனக்கு உண்மையான பீடியை கொடுத்ததாகவும் ஆனால் அதை புகைத்ததும் ஒற்றைத் தலைவலி வந்துவிட்டதால் இனிமேல் பீடி குடிக்க மாட்டேன் என்று மகேஷ் பாபு கூறியதாகவும் இதனை அடுத்து இயக்குனர் த்ரிவிக்ரம், ஆயுர்வேத பீடியை செய்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் நான் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவன் இல்லை, அதனை நான் ஊக்குவிக்கவும் மாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

More News

பிக்பாஸ் முடிந்ததும் குருநாதரை சந்தித்த ரன்னர் அப் மணி.. வைரல் புகைப்படம்..!

விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா மற்றும் ரன்னர் ஆப் வின்னராக மணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

HD தரத்தில் பொதிகை.. எண்ட்ரியாகிறார் ராதிகா சரத்குமார்.. தனியார் டிவிகளுக்கு போட்டியா?

 ஒரு காலத்தில் பொதிகை டிவி மட்டுமே இருந்த நிலையில் அதில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. ஆனால் தனியார் டிவிக்கள் வரவுக்கு பின்னர்

பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் தமிழ் நடிகை.. குஷ்பு மிஸ் ஆனது ஏன்?

பிரதமர் மோடி நேற்று பொங்கல் விழா கொண்டாடிய நிலையில் அதில் தமிழ் நடிகை ஒருவர் கலந்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் இந்த விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

முக்கியமான சீனை கட் பண்ணிட்டாங்களே.. டிவியில் 'லியோ' பார்த்த ரசிகர்கள் அதிருப்தி..!

நேற்று சன் டிவியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 'லியோ' திரைப்படம் ஒளிபரப்பான நிலையில் அந்த படத்தில் உள்ள முக்கியமான காட்சியை கட் செய்துவிட்டார்கள் என விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து

50வது படத்தின் மாஸ் போஸ்டர்.. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியான நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகி இணையத்தில்