முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் அடிதடி

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் மூளையை கசக்கி திரைக்கதை எழுதியும் இன்று வரை அதற்கு பலனில்லாமல் உள்ளது. எனவே அடுத்தகட்டமாக இன்று போட்டியாளர்கள் அடிதடியில் இறங்க ஆரம்பித்துவிட்டனர். அனேகமாக இதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் அடிதடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

சற்றுமுன் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் இரு அணிகளும் பரபரப்பாக விளையாடி வரும் வேளையில் மகத்துக்கும் டேனியலுக்கும் இடையே முதலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதன்பின்னர் அடிதடி ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இருப்பினும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமக்கு கிடைத்த அனுபவத்தின்படி புரமோஷன் அனைத்துமே நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அதே காட்சிகள் நிகழ்ச்சியில் வரும்போது மொக்கையாகிவிடுகிறது. வடிவேலு கூறியதுபோல் ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஷிங் சரியில்லை என்ற எண்ணம்தான் பார்வையாளர்களாகிய நம்க்கு ஏற்படுகிறது.

More News

வெங்கட்பிரபுவை அடுத்து சிம்புவை இயக்கும் பிரபல இயக்குனர்

வெங்கட்பிரபுவை அடுத்து சிம்பு நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன்: கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி ஆவேசம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருணாநிதி மறைவுக்கு பின் ரஜினி-ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி சென்னையில் காலமானதை அடுத்து அவரது உடல் மறுநாள் முழு அரசு மரியாதையுடன் சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிவாரண நிதி: தமிழ் நடிகர்களின் தாராளமும், மலையாள நடிகர்களின் கஞ்சத்தனமும்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும்,

சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்: தமிழக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கருணாநிதி கடந்த வாரம் காலமான சோகத்தில் இருந்து இன்னும் திமுகவினர் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அமைச்சர் உதயகுமார், 'சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்' என்று கூறியுள்ளார்.