இனியும் நான் மகத்தின் காதலி கிடையாது: பிராய்ச்சி மிஸ்ரா அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத், தான் யாஷிகாவை காதலிப்பதாகவும், வெளியே ஒரு பெண் தனக்காக காத்திருக்கின்றார் என்று தெரிந்தும் யாஷிகா மீதான ஈர்ப்பால் காதல் தனக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் இந்த விவகாரத்தில் இருந்து கடவுள்தான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிக்பா வீட்டிற்குள் நுழையும் முன்பு மகத் வெளியிட்ட வீடியோவில் இந்த 100 நாட்கள் பிராய்ச்சியை பிரிந்து எப்படி இருக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று காதல் பொங்க பேசிய மகத், யாஷிகாவின் மீதும் காதல் கொண்டேன் என்று கூறியதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை

மகத் கூறிய இந்த காதல் குறித்த பலர் மகத்தின் காதலியான பிராய்ச்சி மிஸ்ராவிடம் சமூக வலைத்தளம் மூலம்து கேள்வி எழுப்பினர். இதற்கு பிராய்ச்சி மிஸ்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்து கூறியபோது, 'நான் காதலித்த மகத்தை பிக் பாஸ் வீட்டிற்கு நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தேன். பிக் பாஸ் முடிந்த பின்னர் எங்கள் வாழ்க்கையை திட்டமிட முடிவு செய்திருந்தோம். அவர் என்னை உண்மையாக காதலித்தார். நானும் அவரை இன்னும் உண்மையாக நேசிக்கின்றேன். ஆனால் அவர் யாஷிகாவை காதலிப்பது தற்போது தெரிந்துவிட்டதால் இனியும் நான் அவர் காதலி என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவரை நேரில் சந்தித்து அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் இது எனது தனிப்பட்ட பிரச்சனை. இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்பதும், இதிலிருந்து எப்படி மீண்டும் வரவேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இனியும் இந்த பிரச்சனை குறித்து தயவுசெய்து யாரும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம். எனது அக்கறையில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்துள்ளார்.


 

More News

சினிமாவுக்கு வரும் சிவகார்த்திகேயன் மகள்

சினிமாத்துறையில் உள்ள பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றே. சிவாஜிகணேசனின் வாரிசுகள் முதல் விஜய்சேதுபதியின் வாரிசு வரை சினிமாவில் அறிமுகமாகி உள்ளனர்

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து திடீரென விலகிய ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர்

இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இயக்குனர் டேனி போய்லே ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மகத்-யாஷிகா காதல் ஸ்கிரிப்டா? உண்மையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மகத், யாஷிகா ஒருவரை ஒருவர் காதலிப்பதாக நேற்று அறிவித்தனர். தனக்காக வெளியே ஒரு பெண் காத்திருக்கின்றார் என்று தெரிந்தும்

இந்த வாரம் மகத் வெளியேறுவது உறுதியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சன் பட்டியலில் மகத், பாலாஜி, செண்ட்ராயன், மும்தாஜ் ஆகியோர் உள்ளனர்.

விக்ராந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ராந்த் தற்போது 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார்.