மகத்-யாஷிகா காதல் ஸ்கிரிப்டா? உண்மையா?

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மகத், யாஷிகா ஒருவரை ஒருவர் காதலிப்பதாக நேற்று அறிவித்தனர். தனக்காக வெளியே ஒரு பெண் காத்திருக்கின்றார் என்று தெரிந்தும் யாஷிகா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காதலாக மாறிவிட்டதாகவும் இந்த குழப்பத்தில் இருந்து தன்னை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று மகத் கூறினார்.

அதேபோல் மகத்துக்கு காதலி இருப்பதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே தனக்கு தெரியும் என்றும் ஆனாலும் மகத் மீது ஏற்பட்ட காதலை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் யாஷிகா கூறினார்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் இல்லை என்ற தெய்வீக காதல் போல் இருவரும் மாறி மாறி கூறியது பார்வையாளர்களை முட்டாளாக்கும் ஸ்கிரிப்ட் என்றே கருதப்படுகிறது. மகத் மீதான காதல் உறுதியானது என்றும், அவர் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் ஏற்கனவே மகத்தின் காதலி பிராய்ச்சி மிஸ்ரா பேட்டியளித்திருக்கும் நிலையில் மகத் தடுமாடுகிறார் என்பதை நம்பவே முடியவில்லை. ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் இரண்டு பெண்களை காதலிப்பதாக கூறினால் தனது சொந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்று தெரியாத அளவுக்கு மகத் முட்டாளா? எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது பரபரப்பாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஸ்க்ரிப்டே இது என்றே தோன்றுகிறது.

கட்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஆரவ்-ஓவியா, ஹரிஷ் கல்யாண்-ரைசா ஆகியோர் காதலிப்பது போன்று சித்தரிக்கப்பட்டது. ஆனால் வெளியில் வந்ததும் இந்த காதல் குறித்த எந்த செய்தியும் இல்லை. அதேபோல் மகத்-யாஷிகா காதலும் ஸ்கிரிப்ட்டாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.
 

More News

இந்த வாரம் மகத் வெளியேறுவது உறுதியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சன் பட்டியலில் மகத், பாலாஜி, செண்ட்ராயன், மும்தாஜ் ஆகியோர் உள்ளனர்.

விக்ராந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ராந்த் தற்போது 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார்.

ஒரே நாளில் 3 சமந்தா படங்கள் ரிலீஸ்: தென்னிந்தியாவின் முதல் சாதனை

நடிகை சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருப்பதால் இது தென்னிந்தியாவின் முதல் சாதனையாக கருதப்படுகிறது.

விஷாலுடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான 'மதகஜ ராஜா' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்களில் 'மதகஜ ராஜா' ஒருசில பிரச்சனைகளால் வெளிவரவில்லை என்றாலும் 'ஆம்பள' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

முழங்கால் தண்ணீரில் நின்று டீ ஆற்றும் நாயர்: வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வந்த வரலாறு காணாத கனமழையால் கேரள மக்கள் இதுவரை தங்கள் வாழ்நாளில் கண்டிராத பெருந்துன்பத்தை அனுபவித்தனர்.