சரசரவென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்!!! இடிபாடுகளுக்குள் 70 சிக்கியதாக கவலை!

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் நேற்று மாலை 5 மாடிக்கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீடிரென்று சரிந்து விழுந்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 60 பேரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ராய்காட் பகுதியில் உள்ள காஜல்புராவில் 5 மாடிக் கட்டிடம் ஒன்று நேற்று மாலை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 45 குடியிருப்புகள் இருந்ததாகவும் அந்த வீடுகளில் 130 க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கட்டிடம் இடிந்து விழுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியே சென்று விட்டதாகக் கூறப்பட்ட நிலையில் 125 பேர் வரை அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என மகாட் தொகுதியின் எம்எல்ஏ பரத் கோஹாலி நேற்று மாலை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவின் அமைச்சர் அதித்தி தாக்கரே கட்டிட இடுபாடுகளுக்குள் இருந்து இதுவரை 60 பேர் மீட்கப்பட்டு இருக்கின்றனர் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் 25-30 பேர் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் கவலை தெரிவித்து உள்ளார். அதனால் மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய விசாரணைக்குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.

More News

எஸ்பிபி சைகை காட்டி என்னை நலம் விசாரித்தார்: எஸ்பிபி சரண் நெகிழ்ச்சி 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீராக இருப்பதாக

இயக்குனர் கார்த்திக் ராஜூவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் நடிகை நாயகியா?

தினேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜூ.

குடும்பத்துடன் செல்பி எடுத்து பிறந்த நாளை கொண்டாடிய கேப்டன் விஜயகாந்த்!

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் செல்பி எடுத்து கொண்டாடினார் என்பதும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

ரூ.2 லட்சம் நிவாரண உதவி செய்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்

ஒவ்வொரு இயற்கை பேரிடரின்போதும் விஜய் ரசிகர்கள் முதல் நபராய் களத்தில் இறங்கி தங்கள் சொந்த பணத்தில் நிவாரண உதவி செய்து வருவதை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

விக்ரம் இல்லாமலேயே முடிவடைகிறதா 'துருவ நட்சத்திரம்? பரபரப்பு தகவல் 

சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிவடைந்தால்