'மகாநதி' சீரியலில் இருந்து விலகிய நடிகைக்கு திரைப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..

  • IndiaGlitz, [Wednesday,July 03 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மகாநதி’ சீரியலில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகைக்கு தற்போது திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’மகாநதி’ என்பதும் இந்த சீரியலில் கங்கா என்ற கேரக்டரில் நடித்த நடிகை பார்த்திபா கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென விலகினார் என்பதும் தெரிந்தது. அதன் பின்னர் தற்போது இந்த கேரக்டரில் திவ்யா என்பவர் நடித்து வருகிறார்.

’மகாநதி’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பார்த்திபா விலகியதற்கு காரணமாக அவர் அரசு தேர்வுகளுக்கு தயாராகி வருவதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் விலகியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீரென அவருக்கு மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘கொண்டல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட மலையாள படத்தில் பார்த்திபா நடிக்கிறார் என்றும் இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் நாயகனாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.