லைகா நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 02 2019]

தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தற்போது ரஜினியின் 'தர்பார்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 17வது படம் உள்பட ஒரே நேரத்தில் ஒருசில திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. அவற்றில் ஒன்றுதான் அருண்விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் லைகா நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'மாஃபியா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானிசங்கர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகிறது.

More News

இன்று நேற்று நாளை 2' படத்தின் நாயகன் அறிவிப்பு

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாகவும் மியா நாயகியாகவும்  நடித்திருந்தனர்.

ரியல் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரீல் மன்மோகன்சிங்!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் தமிழ் உள்பட

இயக்குனர் சங்க தேர்தல் தேதி மாற்றம்: புதிய தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குனர் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதிய தலைவரை

வரலட்சுமி கூட்டணியில் மிஸ் ஆன த்ரிஷா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை

மகன் இயக்குனராக முழு சொத்தையும் விற்றுக் கொடுத்த பெற்றோர்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் இயக்குனர் சுரேந்திரன் இயக்கியிருக்கும் காதல் படம் 'மாயபிம்பம்'. இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இம்மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளது