கைலாசாவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நித்திக்கு மதுரை இளைஞர் எழுதிய கடிதம்

இந்திய அரசால் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் கூறிக் கொண்டு உள்ளார். மேலும் கைலாசா நாட்டிற்கு என தனி ரிசர்வ் வங்கியை உருவாக்கி இருப்பதாக அறிவித்த அவர் சமீபத்தில் அந்நாட்டின் நாணயங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இல்லாத ஒரு நாடு குறித்து நித்தியானந்தா கூறி வரும் தகவல்களை காமெடியாக ரசிப்பதோடு மட்டுமின்றி நெட்டிசன்கள் பதில் காமெடிகளை செய்து வருகின்றனர். கைலாசா நாட்டில் ஓட்டல் தொடங்க அனுமதி வேண்டும் என ஹோட்டல் அதிபர் ஒருவரும், அங்கு விவசாயம் செய்ய விரும்புவதாக விவசாயி ஒருவரும் நித்திக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கைலாச நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த ஆசை என்று நித்தியானந்தாவுக்கு மதுரை இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை சேர்ந்த விளையாட்டு அமைப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதத்தில் ’கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் எனவே கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் நித்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இல்லாத ஒரு நாட்டை இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் நித்திக்கு இணையாக நெட்டிசன்கள் பதிலடி காமெடிகளை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

செல்போன் திருடனை மடக்கி பிடித்த சிறுமி!!! வைரல் வீடியோ!!!

பஞ்சாப் மாநிலத்தில் திருடன் ஒருவன் சிறுமியைத் தாக்கியபோதும் அவனுடன் சண்டையிட்டு சாதுர்யமாகச் செயல்பட்ட சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளத்தில்

கே.பாக்யராஜ் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜின் வீட்டில் நிகழ்ந்த சோகம் ஒன்றுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

பிரபல நடிகருக்கு பேனர் வைக்கும்போது நடந்த விபத்தில் 4 பேர் பலி: போனிகபூர் இரங்கல்

பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு கட்-அவுட் வைத்த ரசிகர்கள் 4 பேர் விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியான சம்பவம்

விசில் போடு! சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளும் துபாய் சென்று அடைந்தன

திருச்சியில் தேர்வு எழுத வந்த தனுஷ் பட நாயகி: செல்பி எடுத்து குவித்த ரசிகர்கள்

திருச்சியில் தேர்வு எழுத வந்த தனுஷ் பட நாயகியை சுற்றி வளைத்த சக தேர்வர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது