விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் பிரசாந்த் கிஷோர்-ஜெகந்நாதன் ரெட்டி? பரபரப்பு போஸ்டர்

  • IndiaGlitz, [Tuesday,February 11 2020]

கற்பனை வளத்துடன் கூடிய போஸ்டர் அடிப்பதில் மதுரை ரசிகர்களை மிஞ்ச யாரும் இல்லை என்பது தெரிந்ததே. ஏற்கனவே மதுரை ரசிகர்கள் பல சர்ச்சைக்குரிய போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விஜய்யை ஆந்திர முதல்வர் ஜெகநாதன் ரெட்டியும் கார்ப்பரேட் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இணைந்து அரசியலுக்கு இழுக்கும் ஒரு போஸ்டரை ஒட்டி பரபரப்பை மதுரை விஜய் ரசிகர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

அந்த போஸ்டரில் ’ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம், தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று ஜெகநாதன் ரெட்டி மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகிய இருவரும் விஜய்யிடம் கூறுவது போல் அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் உதவியுடன்தான் ஆந்திராவில் ஜெகநாதன் ரெட்டி ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் தமிழகத்தில் அரசியலில் குதித்தால் பிரசாந்த் கிஷோர் உதவ தயார் என்று கூறும் வகையில் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில் விஜய் அதிரடியாக அரசியல் முடிவை எடுப்பாரா? என்று தெரியாது. ஆனால் இந்த போஸ்டரில் உள்ளது போல் உண்மையில் நடந்தால் நன்றாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 

More News

மைனஸ் இரட்டை டிகிரி குளிரில் நடித்த த்ரிஷா! ஒரு ஆச்சரிய தகவல்

தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ராங்கி'.

ஆர்யா கூறிய வசனத்தை அப்படியே கூறிய தமிழக முதலமைச்சர்! என்ன ஒரு ஒற்றுமை!

சூர்யா ஆர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கிய 'காப்பான்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

'விஸ்வாசம்' காட்சியை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தமிழக காவல்துறை!

தல அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான 'விஸ்வாசம்' என்பது அனைவரும் அறிந்ததே

மீண்டும் டெல்லியில் ஆட்சியை அமைக்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது.

'நம்ம ஆட்டத்தை ஆரம்பிச்சுடலாமா'? விஜய் கேள்வியால் பரபரப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் நெய்வேலி படப்பிடிப்பு முடிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது